'கல்யாணி பொன் நுழைவு' பாலம் குறித்து தற்போது வெளியான அறிவிப்பு
Reha
2 years ago
'கல்யாணி பொன் நுழைவு' என பெயர் சூட்டப்பட்டுள்ள, இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கம்பிகள் மேல் அமைக்கப்பட்டுள்ள புதிய களனி பாலம் இன்று (25) மதியம் 3 மணி முதல் மக்கள் பாவனைக்காகத் திறந்துவிடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்தப் பாலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் நேற்றைய தினம் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.