உயிர்த்தஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி உயிரோடா இறுக்கிறார்?  உண்மையை இலங்கை புலனாய்வுப்படை அண்மித்துள்ளது.

#SriLanka #Easter Sunday Attack
உயிர்த்தஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி உயிரோடா இறுக்கிறார்?  உண்மையை இலங்கை புலனாய்வுப்படை அண்மித்துள்ளது.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் ஒரு வியாபாரநோக்கோடு நடைபெற்றது எனவும் அதற்க்கும் இலங்கை இஸ்லாமியர்களுக்கும் விருப்புடையதல்ல எனவும் பல இஸ்லாமிய தலைவர்களும் மக்களும் அடித்து கூறியும், அதன் சூடு இன்னமும் குறையாமல் வீசிக்கொண்டிருக்கிறது.

அ ந்த வகையில்.... சில அறிக்கைகள் கூறுவதுதான் என்ன ... 

பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலை பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபரிடம் கையளித்துள்ளேன். ஏப்ரல் 21ஆம் திகதி காலை தாக்குதல் நடக்கலாம் என நம்பக்கூடிய புலனாய்வு தகவல் ஏப்ரல் 4ஆம் திகதி கிடைத்தது. அந்த தகவல் மூலத்திலிருந்து 20ஆம் திகதியும் தகவல் கிடைத்தது. 

அதை உரிய தரப்பினருக்கு அறிவித்து விட்டேன், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமைக்கான பொறுப்பை ஏற்க முடியாது என முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவரும், மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தன உயர்நீதிமன்றத்தில் நேற்று (25) தெரிவித்தார்.

ஏப்ரல் 21ஆம் திகதி 2019 அன்று நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறியயதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கில், உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியமளிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட ஹேமசிறி பெர்னாண்டோ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோனின் குறுக்கு விசாரணைக்கு பதிலளித்த அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி மற்றும் மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தன இவ்வாறு சாட்சியமளித்தார்.

“பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக கிடைத்த தகவலை சில நாட்களுக்கு முன்பு பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபரிடம் கையளித்தேன். அது மாத்திரமன்றி ஏப்ரல் 21ஆம் திகதி காலை தாக்குதல் நடக்கலாமென, தாக்குதலக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலையும் வழங்கப்பட்ட போதிலும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்காத பொறுப்பை ஏற்க முடியாது.

ஏப்ரல் 21, 2019 அன்று பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும் என்று ஏப்ரல் 4, 2019 அன்று தகவல் கொடுத்த தரப்பினருக்கு அந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி மாலை 4.12 மணியளவில் மீண்டும் தகவல் கிடைத்தது. அந்த புலனாய்வு தகவல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் பொறுப்பு வாய்ந்த பிரிவுகளுக்கு நான் உடனடியாக அறிவித்தேன். நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது, நாட்டை முடக்குவது அல்லது அதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காதது எனது பலவீனம் அல்ல.

பாதுகாப்புச் செயலாளர்கள் மாதாந்தம் மாறினாலும் அரச புலனாய்வுப் பிரிவினர் அளிக்கும் அறிக்கைகளை ஏற்காத பொறுப்பை ஏற்க முடியாது. எனக்குக் கிடைத்த உளவுத் தகவல் பாதுகாப்புச் செயலாளருக்கு நேரடியாகச் சென்றது.

ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும் என்று ஏப்ரல் 4ஆம் திகதி எனக்குக் கிடைத்த தகவல் அதே ஆண்டு ஏப்ரல் 20ஆம் திகதி மாலை சுமார் 4.12 மணியளவில் மீண்டும் கிடைத்தது. பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்தவர்களிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஒரு நபர் தனது புலனாய்வு சேவைகள் வழங்கும் புலனாய்வு அறிக்கைகளை சரியாக புரிந்து கொள்ள இயலாமை என்பது அவர்களின் அனுபவம் மற்றும் அனுபவத்தின் விஷயம். அது என் தவறல்ல.

அரச உளவுப்பிரிவு என்ற வகையில் நாங்கள் உளவுத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம், நாங்கள் வழங்கும் உளவுத் தகவல்களின் அடிப்படையில் செயல்படுவது எங்கள் பொறுப்பு அல்ல. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஒடுக்குவது  காவல்துறை, சிஐடி உள்ளிட்ட பிரிவுகள்.

சஹாரன் ஹாஷிம் யார்? அவரது நோக்கம் என்ன என்பதை அறிய பல ஆண்டுகளாக பாதுகாப்பு செயலாளர்களுடன் அரசஉளவுத்துறை வேலை செய்து வருகிறது. தகவல்களுடன் கூடிய அறிக்கைகள் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உரிய தரப்பினருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, சஹாரான் யார் என்பது குறித்து பாதுகாப்பு தரப்பினருக்கு புரிதல் உள்ளது. சஹாரானின் மனதை என்னால் படிக்க முடியவில்லை. தாக்குதல் இடம்பெற்ற போது ஜனாதிபதி இலங்கையில் இல்லை. எனவே நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு செயலாளருக்கு பாரிய பொறுப்பு உள்ளது.

தாக்குதல் நடப்பதற்கு முந்திய நாளான ஏப்ரல் 20, 4.53 க்கு கிடைத்த உளவுத் தகவல்களை பாதுகாப்புச் செயலாளருக்குத் தெரிவித்தேன்.அதற்கு முன்னதாக, ஐஜிபிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வழங்கிய புலனாய்வு தகவலை பொலிஸ்மா அதிபர் பெரிதாகக் கவனிக்கவில்லை என உணர்ந்தேன்.எனவே பாதுகாப்புச் செயலாளரை அழைத்து, “ஐயா, ஐஜிபி தகவல்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன். எனவே உரிய நடவடிக்கை எடுங்கள்’. என்றேன்.

குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன், சாட்சியமளித்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் குறுக்கு விசாரணை செய்து அரச புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் 1300 மற்றும் 1400 அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது என வினவினார்.

இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம் என்பதால் இதற்கு பதிலளிக்க முடியாது என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன சாட்சியமளித்தார்.

அப்போது, ​​மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த பிரச்னையை எழுப்ப பிரதிவாதிக்கு அனுமதி மறுத்தது.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்றைக்கு (26) ஒத்திவைக்கப்பட்டது.

இவ்விசாரணைகளில் உண்மையான சூத்திரதாரிக்கும் யாருக்கும் தொடர்பு உள்ளது என்பதை கண்டுகொள்ளலாம் என பலர் முணுமுணுப்பது அறியகூடியதாவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!