காஸ் சிலிண்டர் வெடித்ததில் படுகாயமடைந்த 19 வயதான யுவதி மரணம்

#School
Prathees
2 years ago
காஸ் சிலிண்டர் வெடித்ததில் படுகாயமடைந்த 19 வயதான யுவதி மரணம்

காஸ் சிலிண்டர் வெடித்தமையால் திருமணமான கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த 19 வயதான யுவதியொருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த யுவதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (25) மாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நவம்பர் 13ஆம் திகதி பொலன்னறுவை வெலிகந்த சந்துன்பிட்டிய கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் திருமணமான பெண் காயமடைந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

கேஸ் சிலிண்டரில் தீப் பற்றாததால் பெண், தீப்பெட்டியால் கேஸ் குக்கரைப் பற்றவைக்க முயன்றதாகவும்இ அது வெடித்துச் சிதறியதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் வேறு குடும்பஸ்தர் எவரும் இல்லாததால்இ அயலவர்கள் தீயை அணைத்து, காயமடைந்த பெண்ணை வெலிகந்த மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முடித்துக் கொண்டு உயிரிழந்தவரின் சடலத்தை இறுதி சடங்குகளுக்காக ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட வீட்டு எரிவாயு சிலிண்டர் வெடித்து தனது மகள் உயிரிழந்துள்ளதாக பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் மேலும் கோரியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!