இன்று இரவு முக்கிய வர்த்தமானி வெளியீடு
#SriLanka
Prathees
2 years ago
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியிடப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இரசாயன உரங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்த போதிலும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாததன் காரணமாக உரத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, உரக்கப்பல் தொடர்பில் சீனா இலங்கை மீது கோபமடைந்துள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.