ஒரு நபருக்கு ஐந்து லீற்றர் மண்ணெண்ணெய் மட்டுமே!
#SriLanka
Prathees
2 years ago
பலாங்கொடையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு நபருக்கு ஐந்து லீற்றர் வரை மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவித்தலில் ஒருவருக்கு 05 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை காணப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒருவருக்கு 10 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்ட நிலையில் அது மீண்டும் ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்