கண்டியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தாய் பலி: 9 வயது சிறுமி காயம்
#kandy
Prathees
2 years ago
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி, அங்கும்புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்புகேவெல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
குறழத்த சம்பவத்தில் 56 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இதன்போது அவரது ஒன்பது வயது மகள் காயமடைந்து, கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.