தேயிலை செய்கையின் தரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது - ஏற்றுக்கொண்ட அரசாங்கம்
Reha
2 years ago
இரசாயண உரம் தடை செய்யப்பட்டமையினால், தேயிலை செய்கையின் தரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதை தான் ஏற்றுக்கொள்வதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தேயிலை செய்கையாளர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் அளவில் மானிய அடிப்படையில் உரத்தை கொள்வனவு செய்ய முடியும் என ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.