மகாவலி ஆற்றில் வீழ்ந்த கார்: நபரொருவரைக் காணவில்லை
#Police
Prathees
2 years ago
கண்டி - குருதெனிய வீதியில் இலுக்மோதர பகுதியில் கார் ஒன்று மகாவலி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மகாவலி ஆற்றில் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காரில் பயணம் செய்த மூவரில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள்னர்.
எனினும் காரும் மற்றுமொரு நபரும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.