காஸ் சிலிண்டரை தேவாலயத்திற்கு எடுத்துச் சென்று பிரார்த்தனை செய்த அரசியல்வாதி
#Laugfs gas
#Prayer
Prathees
2 years ago
காலி மாவட்ட அரசியல்வாதியொருவரால் காஸ் அனர்த்தங்களிலிருந்து மக்களைக் காக்குமாறு கோரி சீனிகம தேவாலயத்தில் பிரார்த்தனை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பண்டி ஆனந்த என்ற அரசியல்வாதியே இவ்வாறு பிரார்த்தனை செய்துள்ளார். இவர் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் அழைப்பாளராக உள்ளார்.
அவர் தனது வீட்டின் எரிவாயு சிலிண்டரை தேவாலயத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அவரது எரிவாயு சிலிண்டரில் நேர்த்திக்கடன் முடிச்சு ஒன்றைக் கட்டி, அனைத்து இலங்கையர்களையும் எரிவாயு வெடிப்பிலிருந்து மீட்குமாறு பிரார்த்தனை செய்துள்ளார்.