கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!!
Prabha Praneetha
2 years ago
யாழ் - நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, 5ம் வட்டாரம் திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
சடலம் குறித்த பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர்களால் இன்று அவதானிக்கப்பட்ட நிலையில் நெடுந்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட பொலிஸார் விசாரணை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.