கொழும்பின் சில பகுதிகளில் ஏழு மணிநேர நீர் வெட்டு
Prabha Praneetha
2 years ago
கொழும்பின் பல பகுதிகளுக்கு இரவு 10.00 மணி முதல் 07 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல - கொஸ்வத்த, ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் இணைக்கப்பட்டுள்ள அனைத்து இடை வீதிகளிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அவசர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் குறித்த காலப்பகுதிக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என நீர்வள சபை தெரிவித்துள்ளது.