சமையல் எரிவாயு பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி தலைமையில் குழு
Prabha Praneetha
2 years ago
வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ஜனாதிபதி தலைமையில் இந்தக் குழு எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நியமிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.