பண்டிகைக் காலத்தில் நாடு முடக்கப்படமாட்டாது – ரமேஷ் பத்திரன
Prabha Praneetha
2 years ago
பண்டிகைக் காலத்தில் நாட்டில் முடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது என இணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அனைத்து குடிமக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.