மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு - ராஜித்த சேனாரத்ன
Reha
2 years ago
மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டில் ஒரு மில்லியன் பேரில் எத்தனை பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக பார்க்கும்போது எமது நாட்டில் ஒரு மில்லியன் பேருக்கு 664 பேர் உயிரிழந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த தொகை இந்தியாவில் 334, மாலைதீவில் 442, ஆப்கானிஸ்தானில் 182, பங்களாதேசில் 160, பாகிஸ்தானில் 126 ஆகவும் காணப்படுகிறது.
இதனடிப்படையில் மற்ற நாடுகளை காட்டிலும் எமது நாட்டில் கொரோனா தோற்றால் அதிகப்படியானோர் உயிரிழந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.