யாழில் பிறந்து நான்கு நாட்களே ஆன சிசுவிற்கு கொரோனா தொற்று!
#Jaffna
#Corona Virus
#Hospital
Mayoorikka
2 years ago
யாழில் பிறந்து நான்கு நாட்களே ஆன சிசுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து நான்கு நாட்களே ஆன சிசுவிற்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குழந்தையை பிரசவிப்பதற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. பரிசோதனையில் சிசுவிற்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.