நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமரினால் வெளியீடு
Prabha Praneetha
2 years ago
நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக் தலைமையில் இன்று அலரி மாளிகையில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது.
முதலில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவினால் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை வெகுசன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிடம் வழங்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து டளஸ் அழகப்பெருமவினால் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
45 ரூபாய் மற்றும் 15 ரூபாய் பெறுமதியான முத்திரைகளே இவ்வாறு வெளியிடப்பட்டன.