முக்கிய ஆணைக்குழுவின் 200 ஆவணக் கோப்புகள் மாயம்!
#Parliament
Mayoorikka
2 years ago
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் பாரிய ஊழல் மோசடிகள் நடைபெற்றுள்ளன என காணி மறுசீரமைப்பு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
அத்தோடு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் இருந்த 200 கோப்புகள் மாயமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் அமர்பில் கலந்துகொண்டு, வாய்மூல விடைக்கான வினாவுக்குப் பதிலளித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் பாரிய ஊழல் மோசடிகள் நடைபெற்றுள்ளன. இது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.