ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுவது ஏன்?

#spiritual #God
ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுவது ஏன்?

அஞ்சனாதேவிக்கும், வாயுபகவானுக்கும் மகனாக அவதரித்த ஆஞ்சநேயர் குழந்தையாக இருந்தபோது வானில் தோன்றியிருந்த சூரியனை நல்ல உருசியான பழமாக இருக்குமே என்று அதனை கைப்பற்ற எண்ணினார்.

வாயு புத்திரன் அல்லவா? அவர் எட்டிப் பிடிக்க எகிறி குதித்த வேகத்தில் வானில் பறக்கத் தொடங்கினார். சூரியனையே விழுங்குவதற்காக வாயுபுத்திரன் பறந்து செல்வதைக் கண்டு தேவர்கள் அனைவரும் திகைத்துப் போய் நின்றனர்.

அப்போது இந்திரன் தன் வஜ்ஜிராயுதத்தை வீசி ஆஞ்சநேயரை தாக்கினான். அதில் அவரது தாடை ஒடுங்கியது. இதன் காரணமாக சுந்தரன் என்ற இயற்பெயர் கொண்ட ஆஞ்சநேயர் அனுமன் என்று அழைக்கப்பட்டார்.

பால அனுமன் சூரியனைப் பிடிப்பதற்காக வானில் பறந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் ராகு கிரகம் சூரியனைப் பிடித்து கிரகணம் உண்டு பண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் ராகுவால் ஆஞ்சநேயரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

இதனால் சூரியனைப் பிடிக்க ராகுவால் அப்போது இயலாமல் போய் விட்டது. பால அனுமனின் வீர, தீரத்தைக் கண்ட ராகு பகவான் மகிழ்ந்து அனுமனுக்கு வரம் கொடுத்தார். அதாவது தனக்கு உகந்த தானியமான/ உளுந்தால் வடை செய்து அதனை தன் உடல் போல் (பாம்பு உடல் கொண்டவர் ராகு) வளைந்து இருக்கும்படி செய்து (மாலையாக) எவர் ஒருவர் அனுமனுக்கு சாத்தி விழிபடுகிறார்களோ, அவரை எந்தக் காலத்திலும் நான் பிடிப்பதில்லை என்றார்.

மேலும் தன்னால் வரும் தோஷங்கள் யாவும் நிவர்த்தி ஆகிவிடும் எனவும் ராகுபகவான் அனுமனுக்கு வரம் கொடுத்து வாழ்த்தினார். அதனால்தான் உளுந்தால் வடை செய்து 54, 108 அல்லது 1008 என்ற எண்ணிக்கையில் மாலையாகக் கோர்த்து ஆஞ்சநேயருக்கு செலுத்துகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!