எரிவாயு விபத்துகளுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?
#Lasantha Alagiyawanna
Prathees
2 years ago
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றுவரும் எரிவாயு விபத்துக்களுக்கு நிறுவனமே முழுப்பொறுப்பு என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இன்று (02) தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனங்கள் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். நிறுவனங்களின் குறைபாடுகளே இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம்.
நுகர்வோர் சமூகம் எதிர்கொள்ளும் அசௌகரியங்களுக்கு மிகவும் வருந்துகிறோம்.
இந்த நிறுவனங்கள் தவறு செய்திருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டிப்போம் என்றார்.