மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டது எரிவாயு விநியோகம்
Prabha Praneetha
2 years ago
நாடளாவிய ரீதியில் மறு அறிவித்தல் வரை எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பான அறிவிப்பை லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ளதுடன், இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்னவும் (Lasantha Alagiyawanna) அறிவித்துள்ளார்.
இதன்படி நேற்று முதல் மறு அறிவித்தல் வரை இவ்வாறு எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எரிவாயுவின் தரம் குறித்து தெளிவான உறுதிப்படுத்தல் கிடைக்கும் வரையில், இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது