இலங்கையில் ஒமிக்ரோன் தொடர்பில் விரைவில் வெளியாகவுள்ள தகவல்கள்-அச்சத்தில் மக்கள்!
#SriLanka
#Omicron
Nila
2 years ago
ஒமிக்ரோன் திரிபு தொடர்பில் அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் தெளிவான கருத்தை பெற்றுக்கொள்ள முடியும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒமிக்ரோன் வைரஸின் தொற்றை ஏற்படுத்தும் ஆற்றலானது, டெல்டா மற்றும் பீட்டா திரிபுகளுடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகமாகும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் ஒமிக்ரோன் திரிபு முதன் முறையாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டின் கொரோனா நிலவரம் குறித்த தகவல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.