இலங்கையில் கணினி விளையாட்டுக்களுக்கு தடை?
#Complaint
Mayoorikka
2 years ago
குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கும் கணினி மற்றும் அலைபேசி விளையாட்டுக்களை தடை செய்யவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-
கணினி விளையாட்டுகளில் பெரும்பாலான குழந்தைகள் அடிமையாகி உள்ளனர். சில விளையாட்டுக்கள் குழந்தைகளை தற்கொலை வரை இட்டுச் செல்கின்றன. இவ் விளையாட்டுக்களை தடை செய்வதற்கு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தவேண்டும் என்றார்.