சஹ்ரானுடன் தொடர்புடைய நபரொருவர் கண்டியில் கைது!
#SriLanka
#Attack
Nila
2 years ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஹிங்குல பகுதியை சேர்ந்த 25 வயதுடையவரேயே சந்தேகத்தின்பேரில் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டையில் சஹ்ரான் ஹாசிம் நடத்திய பயிற்சி முகாமில் கலந்து கொண்டதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் பயங்கரவாதிகளுக்கு உதவியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.