மின் தடைக்கு மத்தியில் கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை!
#SriLanka
#water
#Colombo
Nila
2 years ago
கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை உறுதிப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில், இவ்வாறு நீர் விநியோக நடவடிக்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. எவ்வாறாயினும், இன்னும் 3 மணித்தியாலங்களில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.