யாழ்.மாவட்டக் கடலில் கரையொதுங்கும் சடலங்களும் காரணம் தெரியாமல் அச்சப்படும் மக்களும். (Video)

Nila
2 years ago
யாழ்.மாவட்டக் கடலில் கரையொதுங்கும் சடலங்களும் காரணம் தெரியாமல் அச்சப்படும் மக்களும். (Video)

வடமராட்சி கடற்கரையில் உடல் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் வடமராட்சி கிழக்கு பூனைத் தொடுவாய் கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே சில கரையொதுங்கிய சடலங்களின் காரணம் தெரியாமல் பீதியில் உள்ள  மக்களுக்கு மேலும் பீதியை ஏற்படுத்தியஉள்ளது.

இதேவேளை கடந்த 27 ஆம் திகதி அன்று வடமராட்சி கிழக்கு மணற்காட்டிலும், வல்வெட்டித்துறை பகுதியில் சடலங்கள் கரை ஒதுங்கியிருந்த நிலையில் 30ஆம் திகதி அன்று வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் ஒருசடலமும் கரை ஒதுங்கியிருந்தன.

இதையடுத்து நேற்றைய தினம் (02) வடமராட்சி சக்கோட்டைப் பகுதியில் பிற்பகல் 2:30 மணி அளவில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியிருந்தன.

அதேபோல் நேற்றைய தினம்  மேலும் ஒரு சடலம் வடமராட்சி கிழக்கு பூனைத் தொடுவாயிலும் உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

கரையொதுங்கிய சடலங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு சடலங்கள் கரை ஒதுங்குவதனால் மக்கள் மத்தியில் பலத்த அச்சநிலை தோன்றியுள்ளன.

இதற்கான காரணதை பொலீசார் விசாரித்து வருவதாகவும், விரைவில் கண்டுபிடித்துவிடுவதாகவும் கூறியிருக்கிறனர்.  அத்தோடு இது இந்திய மீனவர்களின் சடலங்களாகவும் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

அத்தோடு மக்கள் இ ந்த விடயத்தில் பயங்கொளளவேண்டாமெனவும். மக்களின் உதவி இதற்கு தேவையெனவும் பொலீசாரும் தெரிவித்துள்ளர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!