தொடரும் மின்தடை ! இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு!
Reha
2 years ago
நுரைச்சோலை மின் விநியோக மையத்தின் பணிகள் வழமைக்குத் திரும்ப குறைந்தது 2 நாட்கள் எடுக்கும் நிலையில், நாட்டில் இடைக்கிடையில் மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலையில் இரண்டு நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளதாகவும், ஒரு நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் தற்போது வரையில் பழுது பார்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று முற்பகல் 11.30 முதல் மின் விநியோகம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.