இம்ரான் கான் கருத்து - இலங்கை இஸ்லாமியர்களாலும் எச்சரிக்கப்பட்ட பாகிஸ்தான் சம்பவம்
பாகிஸ்தானில் பணிபுரிந்து வந்த நிலையில் இலங்கையரொருவர் இன்று பகல் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது கடுமையான அதிருப்தியினையும், கவலையையும் வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் வெட்கப்படுவதாக இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் - சீல்கோட்டில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர் சக ஊழியர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், பின்னர் சடலம் எரியூட்டப்பட்டுள்ளது.
இது அவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் கடுமையான கண்டனங்களை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்தடு இது தொடர்பாக இலங்கையில் வாழும் இஸ்லாமியர்கள் மத்தியிலும் இச்சம்பவம் தொடர்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.