ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்!
Prathees
2 years ago
நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கும் வரை நாளொன்றுக்கு சுமார் இரண்டு மணிநேரம், குறித்த பிரதேசத்தின் தேவைகளைப் பொறுத்து இலங்கை மின்சார சபை மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்திலிருந்து 600 மெகாவோட் எரிபொருளை மீட்பதற்கு சில நாட்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், மின்தேவைக்கு போதிய மின்சாரம் இல்லாததால் மின்விநியோகத்தை துண்டிக்க நேரிட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நிலைமை இன்னும் சவாலானதாக இருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.