பாராளுமன்றத்தில் லிஃப்டில் சிக்கிய எம்.பிக்கள்
பாராளுமன்ற உறுப்பினர்களான துஷார இந்துனில் மற்றும் லலித் எல்லாவல ஆகியோர் நேற்று (03) மாலை சுமார் 15 நிமிடம் மின்தூக்கியில் சிக்கிக்கொண்டனர்.
இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் அறையில் இருந்து தரை தளத்திற்கு லிஃப்டில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென மின்தூக்கி நிறுத்தப்பட்டதால் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
பின்னர், பாராளுமன்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்து இருவரையும் பத்திரமாக தரை தளத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சு உட்பட பல அமைச்சுக்களின் செலவின தலையீடுகள் மீதான விவாதத்தின் போது குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் உரையாற்றினார்.
ஆளும் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல உரையாடலுக்கு இடையூறு விளைவித்தார், பின்னர் இருவரும் சபையை விட்டு வெளியேறும் போது லிஃப்டில் சிக்கிக்கொண்டனர்.