யாழ். மிருசுவில் பகுதியில் இரயில் - கப் வாகனம் விபத்து. சாரதி பலி!
#SriLanka
Mugunthan Mugunthan
2 years ago
நேற்று யாழ். மிருசுவில் பகுதியில் பிற்பகல் குளிரூட்டப்பட்ட தொடருந்துடன் மகேந்திரா கப் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் சாரதி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவத்தில் மிருசுவிலைச் சேர்ந்த எஸ்.பிரதீப் ( வயது -38 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர் .
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த குளிரூட்டப்பட்ட கடுகதி இரயிலுடனே இந்த கப் வாகனம் விபத்துக்குள்ளாகியது. அவ்வேளை பாதை சமிஞை விளக்குகள் எரிந்த வண்ணம் இருந்ததாகவும், இதனுடன் தொடர்புபட்ட மேலதீக விசாரணைகள் இடம்பெற்றும் வருகிறது