பூஸ்டர் தடுப்பூசி பெறுவதில் வடக்கு மக்கள் ஆர்வமில்லை! சுகாதார பணிப்பாளர் விடுக்கும் வேண்டுகோள்

Mayoorikka
2 years ago
பூஸ்டர் தடுப்பூசி பெறுவதில் வடக்கு மக்கள் ஆர்வமில்லை! சுகாதார பணிப்பாளர் விடுக்கும் வேண்டுகோள்

நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலமையுடைய 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குமான மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்கல் பணி வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் போதும் மக்கள் ஆர்வம்காட்டவில்லை என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

எனவே கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்கு மேற் குறிப்பிட்ட அனைவரும் பூஸ்டர் தடுப்
பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கோவிட் - 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலைமையுடைய 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மேலதிகமாக மூன்றாவது தடவையாக (பூஸ்டர்) கோவிட்-19 தடுப்பூசியானது நவம்பர் 22ஆம் திகதி முதலும் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நவம்பர் 29ஆம் திகதி முதலும் வழங்கப்பட்டு வருகின்றன.

எனினும் வருந்தத்தக்க வகையில் இந்த மேலதிக தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் மக்களிடையே ஆர்வம் குறைவாகவே காணப்படுகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இறப்புக்களை ஆராயும்போது வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களின் எண்ணிக்கையே அதிகமாக காணப்படுகின்றது. தடுப்பூசி ஏற்றிக்கொள்வதன் மூலம் மட்டுமே கோவிட்-19 தொற்று ஏற்பட்டாலும் அதன் தாக்கத்தையும் அதன் மூலம் ஏற்படும் இறப்புக்களையும் குறைக்கக்கூடியதாக இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள நோய் நிலமையுடைய 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று ஆகக்குறைந்தது ஒரு மாத இடைவெளியின் பின்னரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூன்று மாத இடைவெளியின் பின்னரும் இத் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம்.

எனவே மேற்குறிப்பிட்டவர்களில் சினோபார்ம் கோவிட்-19 தடுப்பூசியை இரண்டு தடவைகள் பெற்றுக்கொண்
டவர்கள் மட்டுமே தமது தடுப்பூசி அட்டையினை சமர்ப்பித்து தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியை (பூஸ்டர்) பெற்றுக்கொள்ள முடியும்.

அவ்வகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அந்தந்த பிரதேசங்களுக்குரிய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைகளிலும், நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலமையுடைய 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் தடுப்பூசி அல்லது வேறுமருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கும் இன்று சனிக்கிழமை மற்றும் டிசெம்பர் 11 ஆம் திகதி சனிக்கிழமைகளில் தடுப்பூசி வழங்குவதற்கு யாழ். மாவட்டத்தில் யாழ் போதனா மருத்துவமனை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி ஆதார மருத்துவமனைகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொது மருத்துவமனைகளிலும் இத்தடுப்பூசிகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

60 வயதிற்கு மேற்பட்டவர்களில் அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தடுப்பூசி வழங்கும் நிலையத்தில் உள்ள மருத்துவ அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட மருத்துவமனைகளில் ஏதாவது ஒன்றில் தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும்
என்றுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!