இலங்கையில் விளையாட்டு வினையானது- மின்தடையின் போது 18 வயது இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!
#SriLanka
#Death
#Police
Nila
2 years ago
நாட்டில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்த வேளையில் இளைஞன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் வீட்டின் மேல் மாடியில் இருந்த மின்கம்பத்தை தொட்டபோது, மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டதால் குறித்த இளைஞன் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உடதலவின்ன பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.