மல்லாவியில் நான்கு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது!
#Arrest
Mayoorikka
2 years ago
மது அருந்திவிட்டு வீடொன்றின் முன்னால் நின்று குடும்பஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்
மல்லாவி - அனிஞ்சியங்குளம் பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெறுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த 33 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் யோகேந்திரராசா என்பவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மல்லாவி பகுதியைச்சேர்ந்தவர்களாவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.