உலகில் அதிக விஷமுள்ள ‘சிவப்பு- விஷப் பாம்பு’ இலங்கை மக்களின் பார்வைக்கு..!
#SriLanka
#Dehiwala
#National Zoo
Nila
2 years ago
தெஹிவளையிலுள்ள தேசிய மிருகக்காட்சிசாலையில், உலகின் மிக விஷமுள்ள பாம்புகள் உட்பட பல வகையான ஊர்வன, இறக்குமதி செய்யப்பட்டு பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இவற்றுள் கொடிய விஷமுள்ள ‘சிவப்பு- விஷப் பாம்பு’ ஒரு சிறப்பு வாய்ந்தது.
இந்த இனம் கிழக்கு ஆபிரிக்காவின் அடர்ந்த காடுகளை பூர்வீகமாகக் கொண்ட மிகவும் விஷமுள்ள நாகப்பாம்பு ஆகும்.
இதன் ஆயுட்காலம் 15 – 20 ஆண்டுகள் என்பதோடு, நன்கு வளர்ந்த பாம்பு சுமார் 5 அடி நீளம் கொண்டு காணப்படுகின்றது.
தெஹிவளையிலுள்ள தேசிய மிருகக்காட்சிசாலை கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.