எண் 7 ல் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்?

#Astrology
எண் 7 ல் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்?
  • இந்த எண்மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டது! மற்ற எண்களெல்லாம்,மனிதனின் பிராத்தனைகளுக்கும், சக்திக்கும், வசியங்களுக்கும்கட்டுப்பட்டவை! ஆனால் இந்த 7 எண் மட்டும் இறைவனின் சர்வவல்லமை மிகுத் எண்ணாக உள்ளது!
  • இவர்களது பேச்சில் எப்போதும்பரம்பொருள், விதி, இறைவன் என்ற வார்தைகள் மிகுந்திருக்கும் 7-ம்எண்ணானதும் இளமைக் காலத்தில் போராட்டங்களையும்,வறுமையையும் (பெரும்பாலோர்க்கு)க் கொடுக்கும்.
  • ஆனால் நடுவயதிற்கு மேல் பெருத்த யோகங்களையும், பெரும் செல்வத்தையும்கொடுத்துவிடும்.
  • இவர்கள் தங்களின் கடுமையான உழைப்பில் வந்தபணத்தை, ஏழைகளின் நல்வாழ்க்கைக்காகவும், ஆலயத்திருப்பணிகளுக்காகவும், பொதுத் தொண்டிற்காகவும் அனாதைஆசிரமத்திற்காகவும் செலவழிப்பார்கள்.
  • இவர்கள் உடையிலே எளிமையும், ஆனால் சுத்தமும் இருக்கும்.தங்களது கடமையிலேயே மிகவும் கவனமாக இருப்பார்கள்.இவர்களது செயல்களில் ஒரு கண்ணியம், கட்டுப்பாடும் இருக்கும்
  • உலகத்தை உய்விக்க வந்த இயேசு கிறிஸ்து (Jesus Christ)ஆதிசங்கராச்சாரியார், ரவீந்திரநாத தாகூர் ஆகியோரெல்லாம் இந்த7-ம் எண்ணில் பிறந்தவர்களே!
  • இவர்களுக்குச் சித்துவிளையாட்டுக்கள் எல்லாம் எளிதில் கைகூடும்! இவர்கள் உலகப்பயணம் செய்து, தங்களது அனுபவங்களை உலகத்தாருக்கு அழகுடன்எடுத்துரைப்பார்கள்.
  • பொருளாதார நிலை 7-ம் எண் அன்பர்களுக்குத்திருப்திகரமாக இருக்காது! வேதனைகளும், சோதனைகளும்இவர்களைத் தொடர்ந்து வரும்.
  • எந்த ஒரு செயல் தொடங்கினாலும்அதை நிறைவேறுவதற்காகப் பல தடைகளைச் சந்திக்க வேண்டி வரு.
  • கேது பகவான் கொடுக்க ஆரம்பித்தால் அதை வேறுயாரும்(கிரகங்கள்) அழிக்கவோ, தடுக்கவோ முடியாது என்பதுசோதிட உண்மையாகும். எப்படியும் நல்ல வளமான வாழ்க்கையைத்தங்களது வாழ்நாளில் அடைந்து விடுவார்கள்.
  • 7-ம் எண்ணின் பலம் குறைந்த அன்பர்கள் பலர் உயர் கல்விஅமைந்திருந்தும், திறமைக்கேற்ற ஊதிம் கிடைப்பது மிகுந்ததடைப்படும்.
  • பெரும்பாலான 7-ம் எண்காரர்கள் இதனை நினைத்துவேதனையும், வாழ்க்கையில் விரக்தியும் அடைகின்றனர்.
  • பல இலட்சக்கணக்கான மூலதனத்தைப் போட்டும், செய்தொழிலில்முன்னேற்றத்தைக் காணாத நபர்களின் எண்கள் 7 ஆக இருப்பதைக்காணலம். அதே போன்று இந்த எண்காரர்கள் தொழில் திடீரெனதாழ்ந்து மஞ்சள் கடிதம் (Insolvency Petition) கொடுக்க வேண்டியதுர்ப்பாக்கியத்திற்கும் ஆளாகின்றார்கள்.
  • ஆனால் இந்த அன்பர்கள் சலிக்காமல் மனோ தைரியத்துடன்வாழ்க்கையில் போராடுவார்கள். 3-ம் எண்காரர்கள், போன்றுஇவர்களும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுப்பார்கள்.
  • அண்ணன்சொத்து எடுத்துக் கொண்டாரா, பரவாயில்லை! மனைவிஅவமதிக்கிறாளா& என் தலைவிதி! என்று இருப்பார்கள்.
  • உற்றாரும்,ஊராரும் மதிப்பதில்லையே என்னை ஒருநாள் மக்களும்,உறவினர்களும் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கையும், எதையும்தாங்கிக் கொள்ளும் மனோபலமும் உண்டு!
  • மனத்தில் கற்பனைவளரும். பிரபஞ்ச சக்தியுடன் உடனடித் தொடர்பும் இவர்களுக்கும்க்கிடைக்கும். தங்களது வாழ்க்கையில் கடினமாக உழைத்துத்தான்முன்னேற வேண்டுமே தவிர அடுத்தவர்கள், உறவினர்கள்உதவுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது!
  • ஒன்பது எண்களிலும் 9-ம் எண்ணுக்கே முன்கோபம் உண்டு. அதைஅடுத்து இந்த 7-ம் எண்காரர்களுக்கும் முன்கோபம் அடிக்கடி வரும்.இந்தக் குணத்தினாலேயே, இவர்களது நல்ல செயல்களும்,குணங்களும் மக்களால் மறக்கப்படுகின்றன!
  • பொதுவாகத் தங்கள்மனத்தில் உள்ளதை அப்படியே வெளியில் சொல்லிவிட மாட்டார்கள்.இவர்கள் ஆத்மபலம் மிகுந்தவர்கள்.
  • அடுத்தவர்களின் தூண்டுதலைஎதிர்பார்க்கமாட்டார்கள். இவர்கள் நீதிக்கும், தர்மத்திற்கும்போராடுவார்கள், மக்களுக்காக மனம் விரும்பி உழைப்பார்கள்.அவர்களின் செய்நன்றியைப் பிரதிபலனாக எதிர்பார்க்க மாட்டார்கள்என்பதே இவர்களின் உயர்ந்த குணமாகும்.
  • இவர்களது தொழில்கள்
  • இவர்கள் சினிமா நட்சத்திரங்களாகப் பிரகாசிப்பார்கள். இந்தஎண்காரர்கள் பிரபல பாடர்களாக, கலைஞர்களாக, கவிஞர்களாக,புகழ்பெற்ற எழுத்தாளர்களாக பெரிய விடுதிகளின் உரிமையாளர்களாக இருப்பார்கள்.
  • சவுளித் தொழில், பெட்ரோல், டீசல், பால், தயிர், சோடாபானவகைகள், ஐஸ்கிரீம், புகையிலைப் பொருள்கள்(பீடி, சிகரெட்)விற்பனை போன்ற தொழில்கள் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். திரவசம்பந்தப்பட்ட அனைத்துத் தொழில்களும் இவர்களுக்குப் பெருத்தஇலாபங்களைக் கொடுக்கும்.
  • உத்தியோகங்களில் சிறப்பிருக்காது!அதாவது பதவி உயர்வுகள் ஏதாவது ஒரு காரணம் முன்னிட்டுஇவர்களுக்குத் தள்ளிப் போய்க் கொண்டிருக்கும். சமையல்கலைகளிலும், பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
  • சட்டம், நீதித்துறை ஆகியவற்றிலும் வேலைகள் அமையும். மருந்துக்கடையும் இவர்களுக்குச் சிறந்த இலாபத்தைத் தரும்.
  • அயல்நாட்டுவியாபாரங்களும், ஏற்றுமதி& இறக்குமதி வியாபாரமும் இவர்களுக்குச்சிறந்தது! பத்திரிகை வெளியிடுதல், வியாபாரம் இவர்களுக்குஒத்துவரும்.
  • ரேடியோ, டெலிவிஷன், டெலிபோன், (STD, ISDபூத்) Fax, Xeroxகடை ஆகியவையும் அமைக்கலாம்.
  • இவர்கள் சினிமா சம்பந்தப்பட்டஎந்தத் தொழிலிலும் ஈடுபடலாம். நடிப்பு, இயக்கம்,
  • படப்பிடிப்புசம்பந்தமான அனைத்திலும் இவர்கள் தொடர்ந்து முயன்றால்முன்னேறலாம்.
  • போட்டோ ஸ்டூடியோ, கடிகாரம் (Watch) போன்ற தொழில்களும்சிறந்தவை! சிற்பம், சங்கீதம், நாட்டியம் போன்றவையும்சிறந்தவையே!

திருமண வாழ்க்கை

  • இல்லறத் துறவிகள் என்பவர் இவர்கள்தான். இவர்களுக்குத்திருமணம் காலம் கடந்துதான் நடக்கும். குடும்பத்தினர்கள் இவர்களின்திறமையை பாராட்டுவது அரிதாகும்.
  • திருமண வாழ்க்கையில் ஏதாவதுஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். சில பெண்கள் மிகவும்அழகாக இருப்பார்கள்.
  • பெரும்பாலோர் சுமாராகத்தான் இருப்பார்கள்.தொழில் காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டிலும்,வெளியூரிலும் இருப்பவர்கள் இவர்கள்தான்.
  • இவர்கள் 1, 2, 5, 6ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்லதிருமண வாழ்க்கை அமையும்.
  • குறிப்பாக 2, 1 ஆகிய தேதிகளில்பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும். 8-ஆந் தேதிபிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும்.திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவதுசிறந்தது!
  • 9ம் எண் நடுத்தரமானதுதான். இல்லற வாழ்வில் மட்டும்ஏனோ தகுந்த வாழ்க்கைத் துணை இவர்களுக்கு அமைவதில்லை.பிரிவு சோகமும் இவர்களைத் தொடர்ந்து வரும்.

இவர்களது நண்பர்கள்

1, 2, 5, 6 தேதிகளில் பிறந்தவர்கள் சிறந்த நண்பர்களாகஇருப்பார்கள். 2-ம் எண்காரர்களில் இவர்களுக்கு பெருத்த உதவியும்,முன்னேற்றமும் கிடைக்கும். கூட்டுத் தொழிலும் இவர்களுக்குஒத்துவரும்.

நோய்கள்

  • மனக்கவலைகளும், மனச்சோர்வும் அடிக்கடி இவர்களைப்பாதிக்கும். சிறிய தொல்லைகளையும் பெரிதுபடுத்தி, கவலைப்படும்குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
  • இவர்களுக்குச் சீரணக்கோளாறுகள், பித்தக் கோளாறுகள் போன்றவற்றால் அடிக்கடிபாதிப்பு உண்டு. மலச்சிக்கலுக்கு, ருமேட்டிஸம் (Rhymatism) போன்றபல நோய்களும், தோல் வியாதிகளும் இவர்களுக்கு ஏற்படும்.உடம்பில் நீர்த்தாகம் அதிகமுண்டு.
  • எனவே ரசமுள்ள பழங்களைஅடிக்கடி உணவில் கொண்ண வேண்டும். உடம்பில் கட்டிகள்,கொப்புளங்கள் அடிக்கடி வரும்.
  • இவர்களுக்கு மண் பாத்திரங்களில்செய்யப்படும் உணவுகள், பானங்களால் நன்மையே விளையும்.
  • இவர்களுக்கு ஏற்படும் அனைத்து நோய்கள் இதனால்கட்டுப்படுத்தப்பட்டு விடும்.

கேது யந்திரம் & கேது & 39
14 9 16
15 13 11
10 17 12

கேது மந்திரம்
பலாச புஷ்ப ஸ்ங்காஸம்
தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்!

எண் 7 சிறப்புப் பலன்கள்

  • இப்போது உலகில் ஆன்மீகத்தில் சிறந்து விளங்கும் 7-ம்எண்காரர்களின் வாழ்க்கையைப் பற்றி பார்ப்போம். இது நெப்டியூன்என்னும் கிரகத்தைக் குறிப்பாக இருக்கிறது என்று மேல்நாட்டினர்கூறுவர்.
  • இதைச் சந்திரனின் பிரதிபலிப்பு என்றும் கூறுவார்கள்.இவர்கள் தெய்வீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள். கடவுள்பக்தி அதிகம் நிறைந்தவர்கள்.
  • மனஅமைதி குறைவானவர்கள்.இவர்கள் மனத்தில் அடிக்கடி மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டேஇருக்கும். இந்த எண்களில் பிறந்தவர்கள் உள்ளூரில் புகழ் பெறமுடியாது.
  • வெளியூர், வெளிநாடு என்று பணத்திற்காகவும்,தொழிலுக்காகவும் புறப்பட்டு விடுவார்கள். தூரத்திலுள்ள நாடுகளின்மீது மிகுந்த ஆர்வமும், அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமும்அதிகமாக இருக்கும். பயண நூல்களை எல்லாம் விருபிப் படிப்பார்கள்.
  • இவர்களில் பெரும்பாலோர் நல்ல எழுத்தாளராகவோ,ஓவியர்களாகவோ, கவிஞர்களாகவோ ஆகின்றனர். சிறந்த நடிகர்கள்,இசைக்கலைஞர்கள், கவிஞர்கள் எல்லாம் இவர்களே! 2-ம் எண்ணின்மறுபக்கம் இந்த எண்ணாகும்.
  • இவர்கள் தாங்கள் செய்யும் தொழிலில்எப்போதும் மிகுந்த ஈடுபாட்டோடும், நேரம் பார்க்காமலும் தொடர்ந்துஈடுபடுவார்கள். குடும்பம் என்பது இரண்டாம் பட்சம்தான். பணம்,தொழில் என்று எப்போதும் சுற்றுவார்கள். தர்ம ஸ்தானங்களுக்கும்.தெய்வத் திருப்பணிகட்கும் செலவிடத் தயங்க மாட்டார்கள்.
  • 7-ம் எண்காரர்கள் வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். ஏற்றுமதி,இறக்குமதி செய்பவர்களாகப் புகழ் பெறுவார்கள். தங்களதுமதங்களில் தீவிரமாக நாட்டம் கொள்வார்கள். வழக்கமான பாதையில்செல்வது இவர்களுக்குப் பிடிக்காது.
  • எனவே, மக்களின்சீர்திருத்தத்திற்காகப் போராடுவார்கள். இவர்களுக்குப் பிரபஞ்சஇரகசியங்கள் எல்லாம் எளிதில் கிடைத்துவிடும்.
  • இவர்களின்கனவுகள் பலிதமாகும். அனைத்து செயல்களையும் அறிந்து கொள்ளும்உள்ளுணர்வு நிறைந்தவர்கள். ஐம்புலன்களுக்கும் எட்டாத அரியசெயல்களையும் இயற்கையிலேயே உள்ளுணர்வாக அறிவார்கள்.
  • இவர்களிடம் பிறரை வசியப்படுத்தும் சக்தியுண்டு! மிக எளிதாகஎவரையும் இவர்கள் வசியப்படுத்தி விடுவார்கள். கடுமையானஉழைப்பும், எதையும் ஒழுங்காகவும், சரியாகவும் செய்து முடிக்கும்இயல்பும் இவர்களை வெற்றிப் பாதையில் ஏற்றிவிடும்.
  • இராஜயோகம், மந்திரம், தியானம் ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கைஉடையவர்கள். முழு மனதுடன் அவைகளை அப்பியாசிப்பார்கள்.
  • இவர்கள் சுத்தமான ஆடைகளையே விரும்பி அணிவார்கள்.
  • இல்லறத்துறவிகளாகவே பெரும்பாலோர் இருப்பார்கள். வார்த்தைகளைஇவர்கள் நிதானமாகவே பேசுவார்கள்.
  • யாரிடமும் கலகலப்பாகஇருக்கமாட்டார்கள். ஏதோ சிந்தனையில் இருப்பது போல்தோன்றுவார்கள்.
  • ஒரு பெரிய காரியத்தை எடுத்துக் கொண்டு, மிகுந்தபொறுமையுடன் செயலாற்றி, வெற்றி பெற்றும் விடுவார்கள்.
  • இவர்களுக்கு இளவயதில் பல தடைகளும் கசப்பான அனுபவங்களும்ஏற்படும். திருமணம் அமைவதில் தாமமமாகும்.
  • திருமண வாழ்விலும்பல தடைகள் உண்டு; வேலை விஷயமாகவோ, அல்லது வேறுபிரச்சினைகள் காரணமாகவோ, அடிக்கடி மனைவி, குழந்தைகளைவிட்டுப் பிரிய நேரிடும்.
  • கேதுவின் ஆதிக்கம் குறைந்தால், கெட்டகாரியங்களிலும் துணிந்து ஈடுபடுவார்கள்.
  • காவி உடை கட்டியவேஷதாரியாவார்கள். இவர்களது முயற்சிகளெல்லாம், ஏதாவது ஒருகாரணத்தால், கடைசி நேரத்தில் பாதிக்கப்படும்.
  • மகிழ்ச்சியில்லாதவாழ்க்கை பலபேருக்கு அமையும். சிறு வயது முதலே,தன்னம்பிக்கைதான் இவர்களது முதல் நண்பன் 7-ம் எண்காரர்கள்பிறக்கும்போது, அவர்கள் குடும்பத்திற்குப் பல சோதனைகளும்,விரயங்களும் ஏற்படும்.
  • இளம் வயதிற்குப் பின்புதான்(25 வயதிற்குப்பின்பு) இவர்களது வாழ்க்கையில் அதிர்ஷ்டத் திருப்பங்கள் ஏற்படும்.இவர்கள் பெரிய மதத் தலைவராகவோ, கலைஞராகவோ, தொழிலதிபர்களாகவோ முன்னேறிப் பெரும் பணம், புகழ் குவிக்கும்யோகம் உண்டு.
  • தங்களுக்கு வரும் இடையூறுகளைக் கண்டு கலங்கமாட்டார்கள்.உடல், பொருள், ஆவி மூன்றையுமே பொது வாழ்க்கைக்கெனஅர்ப்பணம் செய்வார்கள்.
  • எவ்வளவு வந்தபோதிலும், தங்களதுலட்சியத்தைக் கைவிடாமல், பிடிவாதத்துடன் செயலாற்றி, வெற்றிஅடைவார்கள்.
  • மனைவி மட்டும் பல அன்பர்களுக்குத் திருப்திகரமான அமையாது.அப்படி அமைந்துவிட்டால் பிரிவும், மனைவிக்கு நோய்களும்அடிக்கடி ஏற்படும்.
  • சில சமயங்களில் மட்டு கலகலப்பாகப்பழகுவார்கள். பல சமயங்களில் தனிமையை விரும்புவார்கள். 6-ம்எண்காரர்கள் எதையும் பணத்தில் நாட்டம் கொண்டு பார்ப்பார்கள்.ஆனால் இவர்களோ கலைக்காகவே அதில் ஈடுபடுவார்கள்.
  • இவர்கள்அரசியலில் ஈடுபட்டால், மக்களின் வாழ்க்கைமுன்னேற்றத்திற்காகவே, தங்களது வாழ்க்கையைச் செலவிடுவார்கள்.

உடல் அமைப்பு Physical Appearance

  • இந்த எண்காரர்கள் பொதுவாக உயரமும், சற்று மெலிந்த உடலும்கொண்டிருப்பார்கள். உடல் உறுப்புகள் மிகவும் கச்சிதமாகஅமைந்திருக்கும்.
  • மூக்கு சற்று நீண்டு வளைந்து காணப்படும். கை,கால் விரல்கள் திருத்தமாகவும் அழகுடனும் இருக்கும். சிலஅன்பர்களுக்குச் சிறு உடல் குறைவும் அமைந்து விடுகிறது.
  • அதிர்ஷ்ட இரத்தினங்கள் Lucky Gems
  • இவர்களுக்கு வைடூர்யம் (CAT’S EYE) இரத்தினமே மிகவும்அதிர்ஷ்டகரமானது! சந்திர காந்தக்கல்லும் (MOONSTONE)நன்மையளிக்கக்கூடியதே!
  • MASSAGATE மற்றும் OPAL (வெள்ளை நிறம்) ஆகிய இரத்தினக்கற்களையும் உபயோகிக்கலாம். நன்மையே தரும். TIGER-EYEஎனப்படும் கல்லும் யோகமான பலன்களைக் கொடுக்கும்.

அதிர்ஷ்ட தினங்கள் 

  • ஒவ்வொரு மாதமும் 2, 11, 20, 29-ந் தேதிகள் மிகுந்தஅதிர்ஷ்டகரமானவை. 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும் நன்மையேஅளிக்கும்.
  • 7, 16, 25 ஆகிய நாட்கள் சுமாரான பலன்களையே கொடுக்கும்.எனவே தவிர்த்து விடவும். கூட்டு எண் 7 அல்லது 8 வரும்நாட்களையும் ஒதுக்கி விடவும். அதே போன்று கூட்டு எண் 2 மற்றும் 1வரும் நாட்கள் அதிர்ஷ்டமானவை.

அதிர்ஷ்ட வர்ணங்கள்

வெண்மை நிறம் மிகவும் ஏற்றது. இலேசான மஞ்சள், பச்சை, நீலம்ஆகிய வண்ணங்களும் சிறந்தவையே. கரும் சிவப்பையும், கருப்புநிறத்தையும் தவிர்க்க வேண்டும். (பல வர்ண) வர்ண உடைகளும்அதிர்ஷ்டமானவை.

7-ஆம் தேதி பிறந்தவர்கள்

  • வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உடையவர்கள். இவர்களுக்குமனைவியும் வெளிநாடு, அன்னிய சம்பந்தம் அல்லது அடுத்த ஜாதிபோன்றவற்றில் அமைவர்.
  • இவர்கள் மிகவும் கண்டிப்பு மிக்கவர்கள்.நேர்மையை மிகவும் மதிப்பார்கள்.
  • ஆன்மிகத்தில் மிகுந்தவிருப்பமுடையவர்கள். நல்ல ரசிப்புத் தன்மையும் உடையவர்கள்.மற்றவர்களின் கருத்தைக் கேட்பவர்கள்.
  • குடும்ப வாழ்க்கையில் சிலபிரச்சினைகள் ஏற்படும். மனைவியை ஓரளவு அனுசரித்துச் சென்றால்நல்ல வாழ்க்கை அமையும்.

16 ஆம் தேதி பிறந்தவர்கள்

  • இவர்கள் கலை உள்ளம் நிறைந்தவர்கள். துணிச்சலும் அறிவுத்திறமையும் உண்டு. நன்றாக முன்னுக்கு வந்துவிடுவார்கள்.
  • ஆனால்திடீரென தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டுபொருள்களை இழக்கும் அபாயமும் உண்டு. எனவே, கவனமாகஇருக்க வேண்டும்.
  • மனோசக்தி மிகுந்தவர்கள். இவர்களுக்கு குழந்தைபிறப்பது சற்றுத் தாமதமாகும். இவர்கள் சுயநலவாதிகளாகஇருப்பார்கள்.
  • முறை தவறிய காதல் விவகாரங்களில் ஈடுபடாதிருக்கவேண்டியது மிகவும் அவசியம். திடீர்ப் புகழ் உண்டு.

25 ஆம் தேதி பிறந்தவர்கள்

  • இவர்கள் தெய்விகத் தன்மை நிறைந்தவர்கள். மக்களக்குவழிகாட்டவே பிறந்தவர்கள். சிறந்த கற்பனைவாதிகள். குடும்பவாழ்க்கை சரிவர அமையாது.
  • எனவே ஆன்மிகத் தலைவராகவோ,நீதிபதியாகவோ மாறி விடுவார்கள். பேரும் புகழும் அடைவார்கள்.இவர்கள் நல்ல திறமைசாலிகள்.
  • இவர்கள் அரசியலிலும் ஈடுபட்டுஎம்.எல்.ஏ, எம்.பி போன்ற பதவிகளை அடைந்து, மக்களுக்கு உண்மையான சேவைகள் செய்வார்கள்.

எண் 7க்கான (கேது) தொழில்கள்

  • இவர் ஆகாயத்தோடு தொடர்புடைய தொழில்களில் வெற்றியைத்தருபவர். தொழில்கள் போன்ற தொழில்களில் ஈடுபடுவார்கள்.உத்தியோகத் துறையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்காது.
  • இவர்கள் தண்ணீரின் மூலம் செய்யும் தொழில்களில் வெற்றிபெறுவார்கள். சமையல் தொழில், சித்திரம் வரைதல் தொழிலும் நன்குவரும்.
  • இவர்கள் மத விஷயங்களில் தீவிரமாக ஈடுபடுவார்கள் அல்லதுஎதிர்ப்பார்கள். பெரிய புகழும், பொருளும் இறுதிக் காலத்திற்குள்சம்பாதிப்பார்கள்.
  • மதவழச் சொற்பாளர்கள், கம்ப்யூட்டர் கல்விபயிற்றுவிப்பாளர்களாகவும் வெற்றி பெறுவார்கள். பலர்வெளிநாடுகளில் பணியாற்றுவார்கள்.
  • மர விற்பனை, மரச்சாதனங்கள்விற்பனை, பாத்திரங்கள் தயாரித்தல் உற்பத்தி செய்தல் மற்றும் பழுதுபார்த்தல் தொழிலிலும் நன்கு அமையும். மருந்துகள், மருத்துவம்தொடர்பான தொழில்கள், வியாபாரங்கள் அமையும்.
  • மிகப்பெரியநடிகர்கள், நடிகைகள் கலைஞர்கள் இவர்களே! கதை, கவிதை,வேதங்கள் ஆன்மீகம், சமூக சேவை செய்தல், வியாபாரம்போன்றவையும் ஒத்து வரும். பிராணிகளைப் பிடிக்கும் தொழில், விஷசம்பந்தமான பொருட்கள் தயாரித்தல் போன்றவையும் நன்குஅமையும்.
  • சூஷ்மமான மூளைத் தொழிலாலான துறை, துறையும்நன்கு அமையும். நியாயம், நேர்மையை அதிகம் மதிப்பவர்கள்இவர்கள். நீதிபதிகள், வக்கீல்கள், மருத்துவர்கள் ஆகிய தொழில்களும்நன்கு இருக்கும். பலர் அரசியல் வானிலும் பிரகாசிப்பார்கள்.ஏற்றுமதி, இறக்குமதி தொழிலும் நன்கு அமையும். தொழிலுக்காககுடும்பத்தினரை அடிக்கடி பிரிவார்கள்.