தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் முதன் முறையாக பார்வைக்கு வைக்கப்படும் பறவை!
#Colombo
#National Zoo
Mayoorikka
2 years ago
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஐந்து கறுப்பு அன்னப் பறவைகள், தற்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
86 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக நடக்கும் சம்பவம் இதுவாகும்.
கடந்த மார்ச் 22 ஆம் திகதி பிறந்த இந்த அன்னப் பறவைகள், கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை.
அவுஸ்திரேலியாவுக்கு உரித்தான இந்த ஐந்து கறுப்பு அன்னப் பறவைகள் தற்போது தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் வசித்து வருகின்றன.
புதிதாகப் பிறந்த அன்னப்பறவைகளில் மூன்று ஆண் பறவைகளும், இரண்டு பெண் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.