மின் தடை தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட மின்சார சபையினர்!
#Electricity Bill
Mayoorikka
2 years ago
இன்றும் நாளையும் `ஒருமணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சார சபையினர் அறிவித்துள்ளனர்.
இன்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலத்திற்குள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு மேற்கொள்ளப்படும் பகுதிகள் தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், தேவைப்படும் போது மின்வெட்டு மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.