இலங்கையில் பிட்கொயின் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
நம் நாட்டில் பலர் கிரிப்டோ கரன்சியான பிட்கொயினை வைத்து என்ன செய்வது என்று திண்டாடுவோருக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் காத்திருக்கிறது.
துறைமுக நகரில் டிஜிட்டல் பணத்தை பயன்படுத்த அனுமதி டிஜிட்டல் பணம் எனப்படும் கிறிப்டோ கரன்சியை கொழும்பு துறைமுக நகருக்குள் பயன்படுத்த அனுமதி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரின் விசேட பொருளாதார பிராந்திய நிர்வாக ஆணைக்குழுவின் தலைவர் சாலிய விக்ரமசூரிய இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
துறைமுக நகர சூழலில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் களியாட்டு சம்பந்தமான செயற்பாடுகளில் இந்த கிறிப்டோ கரன்சியை உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அமெரிக்க டொலர் உட்பட வெளிநாட்டு நாணயங்களும், டிஜிட்டல் நாணயமும் துறைமுக நகரில் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
இதனிடையே கிறிப்டோ கரன்சியை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு தேவையான பரிந்துரைகளை முன்வைக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன் அதற்காக விசேட குழுவையும் நியமித்துள்ளது.
இந்த பிட்கொயின் எனப்படும் கிரிப்டோ கரன்சி அனுமதிக்கப்பட்டால், அதனை வைத்திருப்போரின் வாழ்க்கை தரம் மாறும் என்பதில் ஐ