புங்குடுதீவு குறிச்சிக்காடு இரட்டைத்தெரு சந்தி காப்பெற் வீதியாக புனரமைப்பு! (Photos)
Reha
2 years ago
சூழலியல் மேம்பாட்டு அமைப்பின் (சூழகம்) செயலாளர் திரு . கருணாகரன் நாவலன் அவர்களின் முயற்சியில் வீதி அபிவிருத்தி திணைக்களம் ஊடாக (RDD) புங்குடுதீவு குறிச்சிக்காடு இரட்டைத்தெரு சந்தியானது காப்பெற் வீதியாக புனரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
புங்குடுதீவின் அடையாளமாக தற்காலத்தில் கருதப்படுகின்ற பிரமாண்டமான கண்ணகை அம்மன் கோபுர வளைவினை உள்ளடக்கிய இச்சந்தியானது நீண்டகாலமாக குன்றும் குழியுமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.