இம்ரான் கானுக்கு கடிதம் அனுப்பிய அஸ்கிரிய மகாநாயக்க தேரர்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இக்கடிதத்தை இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டது.
அக்கடிதத்தில் முக்கியமாக குறிப்பிடப்பட்ட விடயம்...
பாகிஸ்தானுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து எடுக்கப்பட்ட உடனடி சட்ட நடவடிக்கையால் பிரதமர் தமக்கு ஈர்க்கப்பட்டதாகவும், பாகிஸ்தான் தலைமையின் சுதந்திரத்தை நிரூபித்ததாகவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதும், பாதிக்கப்பட்ட நபருக்கும் அவர் குடும்பத்துக்கும் நீதி வழங்குவதும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவுக்கு உத்தரவாதம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் மீது இலங்கை மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், இலங்கையர்கள் உட்பட பாகிஸ்தானில் பணிபுரியும் அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் நாட்டில் சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றும், இப்படியான சம்பவங்கள் எ ந்த நாட்டிலும் யாருக்கும் நடக்ககூடாது எனவும், புத்த பகவானை பின் பற்றும் துறவிகல் எப்பொளுதும் இப்படியான வன்முறைகளை விரும்புவதில்லை எனவும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.