கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!
#SriLanka
#Kilinochchi
#Police
#Suicide
Nila
2 years ago
கிளிநொச்சி – பளை – இயக்கச்சி முகாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இயக்கச்சி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சந்திரகுமார் தமிழரசன் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.
நேற்று அவரது வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரை அவதானித்த உறவினர்கள் பளை பளை ருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்திருந்த பளை பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதோடு, கிளிநொச்சி மாவட்ட நீதிவானுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.