மனித உருவில் உள்ள பேய்கள் பிரியந்தவை கொன்றன! இறுதிக்கிரியையில் உரையாற்றிய பௌத்த பிக்கு
பாகிஸ்தானில் பரிதாபமாக உயிரிழந்த பிரியந்த குமார தியவதனவின் இறுதிக் கிரியைகள் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலிக்கு மத்தியில் கணேமுல்ல பொல்ஹேன பொது மயானத்தில் நேற்று (08) இடம்பெற்றது.
முத்திரையிடப்பட்ட சடலம் கடந்த 7ஆம் திகதி காலை கணேமுல்ல பிரதேசத்திலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு நேற்று இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன.
இறுதிக்கிரியைகளின் பின்னர் வண.பெங்கமுவே நாலக தேரர் இறுதி ஊர்வலத்தில் உரையாற்றினார்,
அவர் தனது உரையில்ஈ ''மனித உருவில் பேய்கள் உள்ளன. அவர்களே பிரியந்த குமாரவை கொன்றனர்.
வெளிநாடுகளில் இப்படி நம் மக்கள் கொல்லப்பட்டால் அதற்கு அந்நாட்டு ஆட்சியாளர்களே பொறுப்பு.
ஆட்சிக்கு வந்ததும் ஆட்சியாளர்கள் தங்கள் மக்களைக் காக்க நினைக்காமல் அதிகாரத்தை அனுபவிக்கிறார்கள்.
இந்த நாட்டின் ஆட்சியாளர்களை விட அந்தநாட்டின் ஆட்சியாளர்கள் விரைவாக முடிவுகளை எடுத்துள்ளனர்.
ஈஸ்டர் ஒரு தாக்குதலுக்கு காரணமானவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. ஆனால் பாகிஸ்தான் பிரதமர் கொலையாளிகளை விரைவில் கண்டுபிடிக்க முடிவு செய்தார்.
ஆட்சியாளர்களை நியமிக்கும்போது, மக்களின் உணர்வுள்ளவர்களை எப்படி நியமிக்க வேண்டும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.