தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதை கட்டாயப்படுத்த சட்ட நடவடிக்கை!

Prabha Praneetha
4 years ago
தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதை கட்டாயப்படுத்த சட்ட நடவடிக்கை!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு எதிராக 2 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதை கட்டாயப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் 2 அல்லது 3 மாதங்களில் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எத்தகைய தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாத பெண் ஒருவர் நாட்டுக்கு வந்தமை அவர், ஒமிக்ரோன் திரபு உள்ளமை உறுதி செய்யப்பட்டமை குறித்து கண்டறியப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொடர்பில் புதிதாக கண்டறிப்பட்ட வரைஸ் திரிபு குறித்து எதிர்கால நடவடிக்கைள் நேற்று  நடைபெறும் விசேட கலந்துரையாடலில் தீர்மானங்கள் சில மேற்கொள்ளப்பட விருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4