பிரியந்தவுக்காக சியால்கோட் சட்டத்தரணிகள் எடுத்த முடிவு
#Pakistan
Prathees
2 years ago
பிரியந்த குமார படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு சட்ட உதவி வழங்குவதில்லை என சியால்கோட் சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பிரியந்த கொலைச் சம்பவம் தொடர்பில் அவர் பணியாற்றிய ராஜ்கோ தொழிற்சாலையின் ஊழியர்கள் 345 பேர் கைது செய்யப்பட்டு தனித்தனி இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் 34 பேர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பண்ணாரியந்த குமார கடந்த 3ஆம் திகதி காலை படுகொலை செய்யப்பட்டதோடு, அவரது இறுதிக் கிரியைகள் 8ஆம் திகதி கணேமுல்லையில் இடம்பெற்றது.