பேருந்துகளில் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்! பெண்கள் விசனம்

#Vavuniya #Abuse #Sexual Abuse
Mayoorikka
2 years ago
பேருந்துகளில் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்! பெண்கள் விசனம்

வவுனியாவில்  பேருந்துகளில் சில இளைஞர்கள் பெண்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.

அலுவலக உத்தியோகத்தர் போல் சீரான முறையில் ஆடையணித்து வருகின்ற ஓர் சில இளைஞர்களே இவ்வாறு பெண்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுப்பதாக தெரிவிக்கின்றனர்.

காலை மற்றும் மாலை நேரங்களில் பாடசாலை மாணவர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தனியார் வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் அதிகளவில் தனியார் மற்றும் அரச பேரூந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இச்சந்தர்ப்பங்களில் அலுவலக உத்தியோகத்தர் போல் சீரான முறையில் ஆடையணித்து வருகின்ற ஓர் சில இளைஞர்கள் பேரூந்தில் பெண்களுக்கு அருகேயுள்ள ஆசனத்தில் இருந்து பாலியல் ரீதியான துன்புறுத்தல் மேற்கொள்வதாகவும் சன நெரிசல் காணப்படுகின்ற சமயங்களில் பெண்களுடன் வேணுமென்றே உரசுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்களுடன் பாலியல் ரீதியான செயற்பாட்டில் ஈடுபடும் இவ்வாறான ஓர் சில இளைஞர்களினால் பல பெண்கள் வேலையினை இடைவிட்டுள்ளனர். எனவே பொலிஸார் அதிகாரிகள் சிவில் உடையில் சென்று இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்து சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!