சில நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடைநீக்கம்!
#Airport
Mayoorikka
2 years ago
இந்த நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு சில நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் கொவிட் தொற்று பரவல் அச்சம் காரணமாக தென்னாபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோதோ மற்றும் ஈஸ்வதினி ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கி இருந்த நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.