அயல் நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கான விஷேட அறிவித்தல்
Prasu
2 years ago
அயல் நாட்டிலிருந்து வரும் பயணிகள் ரூபாய் 50,000 மதிப்புள்ள பொருள்களையும். அயல்னாட்டு பயணிகள் ரூபாய் 15,000 மதிப்புள்ள பொருள்களை சுங்க வரி செலுத்தாமல் எடுத்துச்செல்லாலாம். இதற்கி மேல் கொண்டு வரும் பொருட்களுக்கு பொருட்களின் மதிப்பில் 38.50% என்ற அளவில் வரி செலுத்த வேண்டும்.
- இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வரிச்சலுகை கிடையாது.
- ஒரு பயணியின் வரிச் சலுகையை மற்றொரு பயணியின் வரிச் சலுகையோடு இணைக்க அனுமதி கிடையாது.
- தங்க ஆபாரணங்கள் ஓராண்டுக்கு மேல் அயல் நாட்டில் தங்கி விட்டு வரும் இந்திய குடியுரிமை பெற்ற ஆண் பயணிகள் 20 கிராம் (ருபாய் 50,000 க்கு மிகாமல்) வரையிலும், பெண் பயணிகள் 40 கிராம் (ஒரு லட்சத்திற்கு மிகாமல்) வரையிலும் வரி செலுத்தாமல் கொண்டு செல்லலாம்.
- சிகரெட் 100 குச்சிகளுக்கு மேலும் மதுபானங்கள் 2 லி மேலும் கொண்டு வந்தால் சுங்க வரி செலுத்த வேண்டும்.
- LCD/ LED/ PLasma டெலிவிஷன்களுக்கு வரி விலக்கு கிடையாது.
- இந்திய குடியுரிமை பெற்ற பயணிகள் 25,000 ரூபாய் மதிப்பிலான பணங்களை மட்டுமே கொண்டு வர முடியும்.
- வியாபார நோக்கில் கொண்டு வரும் பொருட்கள் பறிமுதல் செய்வதோடு அந்த நபர் தண்டனைக்குள்ளாவார்