அமலுக்கு வருகிறது நிதி ஒதுக்கீட்டு சட்டம்
2022ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1, 2022 இல் தொடங்கி டிசம்பர் 31, 2022 வரை முடிவடையும் நிதியாண்டிற்கான அரசாங்க செலவினங்களுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டதாக இலங்கை நாடாளுமன்றம் நேற்று அறிவித்தது.
இந்த சட்டமூலம் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் பின்னர், நவம்பர் 12ஆம் திகதி, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை (வரவு செலவுத் திட்ட உரை) இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதன்படி, ஏழு நாள் விவாதத்திற்குப் பிறகு, நவம்பர் 22 ஆம் திகதி இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக 153 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதன்பின், நவம்பர் 23ஆம் திகதி முதல் நேற்று வரை நடைபெற்ற குழுநிலைக் கூட்டத்தில் ஒவ்வொரு அமைச்சுகளின் செலவினத் தலைப்புகள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, நேற்று மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, திருத்தங்களுடன் கூடிய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று பிற்பகல் 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் தனது சான்றிதழை இணைத்துள்ளார்.
அதன்படி, இது 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாக நேற்று முதல் நடைமுறைக்கு வருகிறது.