வாகன இறக்குமதிக்கு தொடர்ந்து தடை! ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்திறங்கிய அதிநவீன கார்
#taxes
Mayoorikka
2 years ago
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வெளிநாட்டில் இருந்து இருந்து இறக்குமதி செய்யபப்ட்ட அதி நவீன கார் ஒன்று வந்திறங்கியுள்ளது.
ஜப்பானில் தயாரிக்கப்பட்ட சுமார் 60 மில்லியன் பெறுமதியுடைய Toyota Land Crusher 300 ரக அதிநவீன காரே வந்திறங்கியுள்ளது.
இலங்கையில் வாகனங்கள் இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அதிநவீன கார் எவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டது என கேள்வி எழுந்துள்ளது.
எனினும், அமெரிக்கத் தூதரகத்தால் இந்த கார் வரியின்றி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், வாகனங்களின் இறக்குமதியை அரசாங்கம் இடைநிறுத்துவது தூதரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக அதிகாரி தெரிவித்தார்.
மேலும், அந்த கார் வேறொருவரால் இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.