யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் குருக்கள் ஒருவர் பலி.

#SriLanka #Jaffna
யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் குருக்கள் ஒருவர் பலி.

யாழ்ப்பாணத்தில் குருக்கள் ஒருவர் மோட்டர் சைக்கிள் விபத்தில் காயமடைந்து பின்னர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் ஆனைக்கோட்டையை சேர்ந்த இரத்தினசபாபதி ஜெகதீஸ்வர குருக்கள் (வயது 70) என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் மதியம் , குறித்த குருக்கள் கோவில் பூசை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

இதன்போது, எதிரேவந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இவ்விபத்தில் படுகாயமடைந்து குருக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4